sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சி.பி.ஐ., விசாரணை கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

சி.பி.ஐ., விசாரணை கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சி.பி.ஐ., விசாரணை கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சி.பி.ஐ., விசாரணை கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 12, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பகுஜன் சமாஜ் கட்சியின், மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த, 5ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பொன்னேரி அனைத்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில், மேற்கண்ட கொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகே நடந்தது.

இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று கொலை சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பி, கண்டன உரயைாற்றினர். மேற்கண்ட கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us