/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி - பைக் மோதிய விபத்து காயமடைந்த மாணவி பலி
/
லாரி - பைக் மோதிய விபத்து காயமடைந்த மாணவி பலி
ADDED : ஜூன் 27, 2024 12:31 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரம்யா, 35. இவர், கடந்த மாதம் 31ம் தேதி சகோதரர் ரஞ்சித், 34, என்பவருடன், 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில் சாருமதி, 12, சுஜிதா, 15, ஆகிய இரு மகள்களுடன் திருவள்ளூர் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மணவாள நகர் அருகே வந்த போது, பின்னால் வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட 'அசோக் லேலண்ட்' லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த மூவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின் ரம்யா, சுஜிதா ஆகிய இருவரும், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ரஞ்சித் சிறுகாயம் அடைந்தார். நேற்று காலை சுஜிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர், மப்பேடு பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.