ADDED : மார் 06, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக,வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன்மற்றும் அதிகாரிகள்அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பென்னலுார்பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி அருகே சென்றபோது, ஓட்டுநர்தப்பியோடினார்.
லாரியை சோதனைசெய்ததில், முறையாக அனுமதி பெறாமல் மணல் கடத்தியது தெரிந்தது.
ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் லாரி ஒப்படைக்கப்பட்டது.