/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் பைனலில் லயோலா கல்லுாரி
/
பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் பைனலில் லயோலா கல்லுாரி
பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் பைனலில் லயோலா கல்லுாரி
பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் பைனலில் லயோலா கல்லுாரி
ADDED : மார் 02, 2025 11:55 PM
சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி சார்பில், பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இருபாலருக்குமான இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 16 அணிகள், பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் ஆண்களுக்கான 'லீக்' போட்டியில், தொடர் வெற்றியைக் குவித்த லயோலா கல்லுாரி அணி, அரையிறுதியில் கோவை கே.பி.ஆர்., கல்லுாரி அணியை எதிர்கொண்டது.
முதலில் களமிறங்கிய லயோலா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு, 176 ரன்கள் எடுத்தது.
சவாலான இலக்குடன் களமிறங்கிய கே.பி.ஆர்., அணி, 137 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், லயோலா கல்லுாரி அணி, 39 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு 'சூப்பர் நாக் --அவுட்' போட்டியில், குருநானக் கல்லுாரி அணி, 92 ரன்கள் வித்தியாசத்தில் ஜபாஸ் கல்லுாரி அணியை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.