நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே, ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நேற்று, அப்பகுதி வி.ஏ.ஓ, ராமசாமி போலீசில் புகார் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த நபர், 30- 33 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என தெரிந்தது.
இறந்து 2-3 தினங்கள் ஆன நிலையில் உடல் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.