sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாரிய வீடு தருவதாக மோசடி ரூ.1.50 கோடி சுருட்டியவர் கைது

/

வாரிய வீடு தருவதாக மோசடி ரூ.1.50 கோடி சுருட்டியவர் கைது

வாரிய வீடு தருவதாக மோசடி ரூ.1.50 கோடி சுருட்டியவர் கைது

வாரிய வீடு தருவதாக மோசடி ரூ.1.50 கோடி சுருட்டியவர் கைது


ADDED : செப் 04, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:கூடுவாஞ்சேரி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்சிங்கம், 61. இவர், தலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி, பலரை நம்ப வைத்துள்ளார்.

அவர்களிடம், படப்பை அருகே, பணப்பாக்கத்தில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்று வந்துள்ளார்.

கடந்த, 2013 முதல் 2018ம் ஆண்டு வரை, ராமாபுரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கவுதமன், 35, உட்பட 104 பேரிடம், தலா 85,000 ரூபாய் வீதம், 88 லட்சம் ரூபாய் வாங்கினார்.

அதேபோல், 2016ல், பழைய வண்ணாரப்பேட்டையில் 60 பேரிடம் 24 லட்சம் ரூபாய்; 2018ல் அயப்பாக்கத்தில் 350 பேரிடம் 38.50 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார். வீட்டு ஆணையை போலியாக தந்து, 1.50 கோடி ரூபாய் வரை மோசடியாக பெற்றுள்ளார்.

இது குறித்து, 2018ல் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கவுதமன் புகார் அளித்தார். விசாரித்து வந்த தனிப்படை போலீசார், பல ஆண்டு களாக தலைமறைவாக இருந்த பொன்சிங்கத்தை, சென்னையில் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us