/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லுங்கியில் கால் சிக்கி விழுந்தவர் உயிரிழப்பு
/
லுங்கியில் கால் சிக்கி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : மார் 07, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 68. இவர், கடந்த 2ம் தேதி வீட்டில் லுங்கியை அணிந்த போது, கால் சிக்கி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்தவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குப்பனின் மகன் பிரகாஷ் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.