sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீஞ்சூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

/

மீஞ்சூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

மீஞ்சூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

மீஞ்சூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : செப் 09, 2024 07:01 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்: மீஞ்சூர், ராமரெட்டிப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் அமைந்து உள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் முடிந்த நிலையில், நேற்று மஹா கும்பாபிஷே கம் நடந்தது.

கடந்த, 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷே க விழா துவங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று அதிகாலை, யாகசாலை பூஜைகள், திருக்குடங்கள் புறப்பாடு நடந்தன. காலை, 7:00மணிக்கு, கோவில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

தொடந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன், மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபஆராதனை நடந்தது.

இரவு, விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், பச்சையம்மன் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us