sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் போலீஸ் குடியிருப்பு

/

சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் போலீஸ் குடியிருப்பு

சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் போலீஸ் குடியிருப்பு

சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் போலீஸ் குடியிருப்பு


ADDED : ஜூலை 19, 2024 03:56 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 03:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்: மீஞ்சூர் காவல் நிலையத்தின் அருகில், கடந்த, 1999ல், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

ஒவ்வொரு கட்டடத்திலும் தரை, முதல் மற்றும் இரண்டாம் தளம் என ஆறு குடியிருப்புகள் உள்ளன. இதுபோன்று, நான்கு அடுக்குமாடி கட்டடங்களில் மொத்தம், 24, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கு தனித்தனி குடியிருப்புகளும் கட்டப்பட்டன.

கட்டடம் கட்டி, 15ஆண்டுகளிலேயே அதன் உறுதிதன்மையை இழந்தது. இதனால், கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டன. குடியிருப்புகள் ஒவ்வொன்றாக சேதம் அடைந்ததை தொடர்ந்து, காவலர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

கடந்த, 10ஆண்டுகளாக மேற்கண்ட காவலர் குடியிருப்புகள் கட்டடங்கள் பயன்பாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது.

தற்போது கட்டடங்களில் அதிகளவில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் கொட்டியும் வருகிறது. இவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளன.

தற்போது இவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மாலை நேரங்களில் மதுகுடிப்பவர்கள், கஞ்சா புகைப்பவர்கள் இந்த வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.

பாழடைந்த காவலர் குடியிருப்புகள் அருகே மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மற்ற குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், கட்டடம் இடிந்து விழுந்தால் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்பு கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்றி, மாற்று திட்டங்களுக்கு அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us