sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

/

சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 13, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆண், பெண்களுக்கு 30 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டியில், 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். சிறுபான்மையின மாணவ- - மாணவியருக்கு, அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய், 3 சதவீத வட்டியிலும் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர், கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us