/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மேம்பாட்டிற்கு நவீன வாகனங்கள்
/
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மேம்பாட்டிற்கு நவீன வாகனங்கள்
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மேம்பாட்டிற்கு நவீன வாகனங்கள்
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மேம்பாட்டிற்கு நவீன வாகனங்கள்
ADDED : ஆக 25, 2024 11:17 PM

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையில் நடந்த, 'நம்ம மெரினா நம்ம பெருமை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று துவக்கி வைத்தார்.
கடற்கரையின் சுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 குழந்தை துாதுவர்களுக்கு, அவர் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தலைமையில், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கடைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், தலா, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று நவீன கடற்கரை மோட்டார் வாகனங்களை வழங்கினார்.
ஐந்தாண்டு பராமரிப்புக்கான 9.82 கோடி ரூபாயுடன், தலா 12.97 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு 'ரோபோட்டிக் மல்டி பர்பஸ் எஸ்கலேட்டர்' இயந்திரங்களையும் வழங்கினார்.
இவை, 3.5 மீட்டருக்கு குறைவான ஆழமுள்ள நீர்நிலைகளை துார் வார பயன்படும். மேலும், கடற்கரையை சுத்தம் செய்யும், புதுப்பிக்கப்பட்ட இயந்திரங்களையும் சென்னை மாநகராட்சிக்கு வழங்கி, அவற்றின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சியில் பணியின்போது இறந்த 253 ஆண்கள், 158 பெண்கள் என, 411 பேரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் வகையில், 50 பேருக்கு அடையாள பணியாணைகளை வழங்கினார்.
நிகழ்வில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தயாநிதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

