sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அபாய நிலையில் மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி

/

அபாய நிலையில் மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி

அபாய நிலையில் மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி

அபாய நிலையில் மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 31, 2024 02:36 AM

Google News

ADDED : மே 31, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்,:கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் இருந்து மண்ணுார், நெமிலி வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி பாப்பரம்பாக்கம், கொப்பூர், அரண்வாயல்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் தினமும் இரு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக மாறியுள்ளன. சில இடங்களில் இரும்பு மின்கம்பங்கள் வாகனம் மோதி சேதமடைந்தும் சாய்ந்த நிலையிலும் உள்ளன.

இதனால் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

தற்போது ஸ்ரீபெரும்புதுாரில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் அரசு, தனியார், தொழிற்சாலை பேருந்துகள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் திருவள்ளூர் சென்று வருகின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us