ADDED : ஜூன் 04, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடைச் சேர்ந்தவர் சுதாகர், 70. கடந்த மே 31ம் தேதி மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.