sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுடுகாடு சாலை அமைப்பதில் அலட்சியம் அரைகுறை பணிகளால் தொடரும் அவதி

/

சுடுகாடு சாலை அமைப்பதில் அலட்சியம் அரைகுறை பணிகளால் தொடரும் அவதி

சுடுகாடு சாலை அமைப்பதில் அலட்சியம் அரைகுறை பணிகளால் தொடரும் அவதி

சுடுகாடு சாலை அமைப்பதில் அலட்சியம் அரைகுறை பணிகளால் தொடரும் அவதி


ADDED : ஜூன் 19, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சுடுகாட்டுக்கு சிமென்ட் சாலை அமைக்க அரசு ஒதுக்கீடு செய்த, 2.39 லட்சம் ரூபாயில் முறைகேடு நடந்ததால், பணி முழுதும் நிறைவடையவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெமிலி அகரம் ஊராட்சி. திருத்தணி - பூண்டி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இந்த கிராமம் அமைந்து உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள கீழ்விளாகம் பட்டியலினத்தவர் காலனியில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது.

இதையடுத்து, பூண்டி ஊராட்சி ஒன்றிய சார்பில், கீழ்விளாகம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடந்த, 2023-24ல் 2.39 லட்சம் ரூபாய் மதிப்பில் சுடுகாட்டுக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.

ஆனால், இப்பணி அரைகுறையாக நடந்துள்ளது. கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு மேல் பணி நடக்காமல், குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் அரசு வழங்கிய நிதியில், ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வை செய்த, பூண்டி ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமே என, சமூக ஆவர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தி, சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us