/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்டப் படிப்பு துவக்கம்
/
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்டப் படிப்பு துவக்கம்
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்டப் படிப்பு துவக்கம்
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்டப் படிப்பு துவக்கம்
ADDED : மார் 09, 2025 02:58 AM

சென்னை: சென்னை அருகே பையனுாரில் உள்ள, விநாயகா மிஷன் சட்டக் கல்லுாரியில், நேற்று எல்.எல்.எம்., முதுகலை புது படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
வி.எம்.எல்.எஸ்., எனும் விநாயகா மிஷன் சட்டக் கல்லுாரி, காலத்துக்கு ஏற்றார்போல் புது புது படிப்புகள் வழங்கி வருகிறது.
ஏற்கனவே அறிவித்தபடி, எல்.எல்.எம்., முதுகலை புது படிப்பு நேற்று துவக்கப்பட்டுள்ளது. ஜிண்டால் குளோபல் பல்கலை உடன் இணைந்து, உலக தரம் வாய்ந்த பயிற்சி வழங்க உள்ளது.
இதன் துவக்க விழாவில், மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன், சிறப்பு எல்.எல்.எம்.,முதுகலை பட்டம் குறித்தும், அதன் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.
வி.எம்.எல்.எஸ்.,சின் டீன் டாக்டர் அனந்தபத்மநாபன், சட்டக்கல்வியில் புதுமை மற்றும் தொழில்நுட்ப சட்டத்தில், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்துபேசினார்.
மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், சட்ட நுண்ணறிவுகள் குறித்து விரிவாக பேசினார். இந்த கல்லுாரியில், எல்.எல்.எம்., படிக்க மாணவர்களிடம், ஆர்வம் அதிகரித்து வருகிறது என, வி.எம்.எல்.எஸ்., தெரிவித்துள்ளது.
நிகழ்வில் வி.எம்.எல்.எஸ்., வழிநடத்தல் குழு ஒருங்கிணைப்பாளரான ஆண்டனி ஆர் ஜூலியன், கே.ஆர்.ஐ.ஏ., பங்குதாரர் நவோத் பிரசன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.