sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விதிமீறல் கட்டடங்களுக்கு புது உத்தரவு

/

விதிமீறல் கட்டடங்களுக்கு புது உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கு புது உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கு புது உத்தரவு


ADDED : மே 07, 2024 06:44 AM

Google News

ADDED : மே 07, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சி.எம்.டி.ஏ.,வின் சமூக வலைதள பக்கங்களில், கடந்த சில மாதங்களாக விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், 2023 முதல் விதிமீறல் கட்டடங்களுக்கு வழங்கிய பணி நிறுத்த நோட்டீஸ்கள் குறித்து, பொறியாளர் ஒருவரின் கேள்விக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்த பதில்:

சி.எம்.டி.ஏ., அனுமதி இன்றியும், அனுமதி விதிகளுக்கு மாறாகவும், கட்டுமான பணிகள் நடப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து, பணிகளை நிறுத்த நோட்டீஸ் அளிப்பர். இதனால், பணிகள் முழுமையாக நிறுத்தப்படும்.

தற்போது, புகார் தெரிவிக்கப்படும் கட்டடங்களுக்கு பணி நிறுத்த நோட்டீஸ், 2023 முதல் வழங்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக, அந்த கட்டடம் விதிப்படி இருக்கிறது அல்லது அனுமதி பெறப்பட்டது என்பதற்கான ஆதார ஆவணங்களை கேட்டு, நோட்டீஸ் மட்டுமே அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us