sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இடம் மாற்றிய மதுக்கடைக்கு எதிர்ப்பு

/

இடம் மாற்றிய மதுக்கடைக்கு எதிர்ப்பு

இடம் மாற்றிய மதுக்கடைக்கு எதிர்ப்பு

இடம் மாற்றிய மதுக்கடைக்கு எதிர்ப்பு


ADDED : செப் 09, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பஜார் பகுதியில், கோவில், பள்ளி, அரசு மருத்துவமனை அருகே அரசு மதுக்கடை இயங்கி வந்தது.

ஈகுவார்பாளையம் கிராம மக்களுக்கு பல வகையில் இடையூறாக இயங்கி வந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என, பல ஆண்டு காலமாக கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், கடந்த வாரம், ஈகுவார்பாளையம் கிராம எல்லையில் உள்ள வாடகை கட்டடத்தில், அந்த கடை இடம் மாற்றப்பட்டது.

இடம் மாற்றிய கடைக்கு, சூரப்பூண்டி, பனத்தமேடுகண்டிகை, சாணாபுதுார் மற்றும் ராமசந்திரபுரம் கிராமமக்கள், எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

ஒதுக்குப்புறமாக உள்ள அந்த மதுக்கடை வழியாக மேற்கண்ட நான்கு கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர், தினசரி கடந்து செல்கின்றனர்.

மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பள்ளி மாணவியர் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், உடனடியாக அந்த கடையை அகற்ற வேண்டும் என நான்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us