ADDED : ஆக 22, 2024 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆந்திர மாநிலம் விஜயபுரம் மண்டலம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி, 60. இவர் நேற்று அதிகாலை சென்னை—திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே சாலையோரமாக நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக சென்ற தனியார் கம்பெனி பேருந்து, சுபாஷினி மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.