ADDED : ஆக 18, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் குப்பம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 82.
அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 16ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
அப்போது விஷ வண்டு கடித்ததில் படுகாயமடைந்தார். உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.