நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், 60. தேரடி பகுதியில் இட்லிக் கடை நடத்தி வந்த இவர் கடன் பிரச்னையால் கடையை லீசுக்கு கொடுத்து விட்டு அதே கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது மகன் அரவிந்த் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.