sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்

/

கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்

கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்

கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்


ADDED : மே 07, 2024 06:58 AM

Google News

ADDED : மே 07, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புண்டரீகபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஜெயா வேளாண் கல்லூரி.

இந்த கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர், திருவாலங்காடு ஊராட்சியில் வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள், நேற்று திருவாலங்காடு வடக்கு மாட வீதியில், 'ஊரக பங்கேற்பு மதிப்பீடு' எனும் தலைப்பில் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களை கோலத்தில் வரைந்தனர்.

மேலும், விவசாயிகளின் பிரச்னைகளையும், கரும்பு மற்றும் நெல் விவசாயிகளின் வரவு -- செலவு கணக்கு, கிராமத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளின் எண்ணிக்கை, காலநிலை, பருவநிலை மாற்றம், ரிசோர்ஸ் மேப் பிரதிபலிக்கும் படி அமைத்திருந்தனர்.

இதை தொடர்ந்து கோவில், சர்க்கரை ஆலை, தேரடி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை பிரதிபலிக்கும் படி அமைக்கப்பட்ட கோலம் அனைவரையும் கவர்ந்தது.

இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டுகளித்தனர்.






      Dinamalar
      Follow us