தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூன் 29, 2026 03:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்கு, சாலை சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கூறப்படுகிறது. அதனால், பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, நேற்று அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள் ரவி, நடராஜன் ஆகியோர் விரைந்து வந்து, மக்களிடம் சமாதான பேச்சு நடத்தி, ‘அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்’ என, உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us