sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உப்பளத்தில் பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

/

உப்பளத்தில் பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

உப்பளத்தில் பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

உப்பளத்தில் பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பெற்றோர் எதிர்பார்ப்பு


ADDED : மே 16, 2024 12:42 AM

Google News

ADDED : மே 16, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட உப்பளம் கிராமத்தில், குழந்தைநேய பள்ளி மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு துவக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

இதற்காக இங்கிருந்து பழைய வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாகவும், புதிய கட்டடம் கட்டும் பணிகளுக்கு இடையூறாகவும், முகப்பில் இருந்த, 30 மீ. சுற்று சுவரும் இடிக்கப்பட்டது.

கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், இடிக்கப்பட்ட சுற்றுசுவரை மீண்டும் கட்டாமல் அப்படியே போடப்பட்டு உள்ளது. இதனால் பகல் நேரங்களில் கால்நடைகளின் வசிப்பிடமாகவும், இரவு நேரங்களில் குடிகாரர்களின் குடிமையமாகவும் பள்ளி வளாகம் மாறி உள்ளது.

தனியார் வாகனங்களும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தற்போது பள்ளிவிடுமுறை என்பதால் மாணவர்களுக்கு இடையூறு இல்லை.

அடுத்தமாதம் பள்ளி திறக்கும்போது, சுற்று சுவர் இல்லாதது. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும். பள்ளி திறக்கும் முன், சுற்று சுவர் அமைத்திட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us