sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

/

சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை


ADDED : ஆக 16, 2024 10:12 PM

Google News

ADDED : ஆக 16, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் கோட்டைமேடு காலனியை சேர்ந்தவர் ஜெகன், 38. சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர். இவரது மனைவி அபிஷா பிரியவர்ஷினி, 34. இவர் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர்.

நேற்று முன்தினம் ஐந்துபேர் கொண்ட கும்பல், ஜெகன் வீட்டின் நுழைவுவாயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சோழவரம் அடுத்த சிறுணியம் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ், 37. என்பவரது வீட்டிலும் கத்தியுடன் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டியதுடன், கார் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.

மூன்றாவது சம்பவமாக, சோழவரம், சென்னை- கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி பார்க்கிங் பகுதியில் புகுந்து லாரி டிரைவர், சிவா, என்பவரை கத்தியால் வெட்டி, அங்கும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது.

போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஒரே கும்பல் இச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. அதையடுத்து நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் அட்டகாசம் செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், சோழவரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 25 மற்றும் கூட்டாளிகள் இதில் ஈடுபட்டது தெரிந்தது.

போலீசார் அவர்களை தேடி வந்தனர். நேற்று ஆந்திராவில் பதுங்கியிருந்த டியோ கார்த்திக் மற்றும் மூன்று பேரை பிடித்து சென்னை கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் மாமூல் கேட்டு, தரமறுத்ததால் அவர்களை அச்சுறுத்துவதற்காக கும்பல் மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கார்த்திக் மீது, ஏற்கனவே சோழவரம், ஊத்துக்கோட்டை காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

சோழவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சேதுபதியின் கூட்டாளி தான் கார்த்திக். சேதுபதி மீது, சோழவரம் காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

சரித்திர பதிவேடு குற்றாவாளிகளின் 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடியாவார். கடந்த ஆண்டு, சோழவரம் பகுதியில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட முத்துசரவணனின், எதிர்தரப்பாக செயல்பட்டு வந்தவர்.

இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சேதுபதி, கடந்த மாதம், 17 ம் தேதி, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேதுபதி சிறையில் இருக்கும் நிலையில், கூட்டாளியான கார்த்திக், மாமூல் வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக தொழில் செய்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் எண்ணத்தில் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us