sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழவேற்காடு கடலில் மூழ்கி தனியார் வங்கி ஊழியர் பலி

/

பழவேற்காடு கடலில் மூழ்கி தனியார் வங்கி ஊழியர் பலி

பழவேற்காடு கடலில் மூழ்கி தனியார் வங்கி ஊழியர் பலி

பழவேற்காடு கடலில் மூழ்கி தனியார் வங்கி ஊழியர் பலி


ADDED : பிப் 23, 2025 08:11 PM

Google News

ADDED : பிப் 23, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:சென்னை, ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 37. தனியார் வங்கி ஊழியர். இவர், நேற்று, நண்பர்களுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்தார். படகு சவாரி செய்து, முகத்துவாரம் பகுதிக்கு சென்று அங்கு நண்பர்களுடன் கடலில் ஜாலியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டார்.

நீரில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்தவரை நண்பர்கள் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் தினேஷின் உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தடையை மீறி படகு சவாரிக்கு, சுற்றுலாப் பயணிரை அழைத்து சென்ற படகோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us