/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்
/
வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஜூலை 05, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கீச்சலம் கிராமத்தில் வரும் 25ல் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிப்பட்டு வட்டம், நெ.18 கீச்சலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு முகாம் வரும் 25ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் முகாமில், அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.