/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாப்பரம்பாக்கத்தில் 28ல் மக்கள் தொடர்பு முகாம்
/
பாப்பரம்பாக்கத்தில் 28ல் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஆக 21, 2024 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பாப்பரம்பாக்கம் கிராமத்தில், வரும் 28ல் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் வட்டம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வரும் 28 காலை 10:00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது.
அதுசமயம் அனைத்துத் துறையை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.