/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலநிலை மாற்றம் குறித்து பொம்மலாட்ட விழிப்புணர்வு
/
காலநிலை மாற்றம் குறித்து பொம்மலாட்ட விழிப்புணர்வு
ADDED : செப் 01, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் காலநிலை மாற்றம், அதன் விளைவுகள், அதற்கான தீர்வுகள் குறித்து, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
சி.ஏ.ஜி., என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்வில், மவுனமொழி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் நடந்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, மரம் வளர்ப்பது, இயற்கை வளங்களை காப்பது, குப்பையை தரம் பிரித்து அகற்றுவது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.