ADDED : ஆக 21, 2024 07:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 27. இவர், கடந்த மார்ச் மாதம், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரால், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த வாரம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனளிக்காமல், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.