/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 13, 2024 05:25 PM
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை 15ல் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் உத்தரவின்படி, பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை 15ல் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னனு குடும்ப அட்டையில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.