ADDED : ஆக 01, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது.இக்கோவிலில், இரண்டாம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா, 29ம் தேதி முதல் நேற்று வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இக்கோவிலில், 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடத்திய பின், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்கின்றனர்.
நிறைவு நாளான நேற்று, மூலவர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. நேற்றுடன் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா நிறைவு பெற்றது.