/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் கோரிக்கை
/
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் கோரிக்கை
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் கோரிக்கை
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : ஆக 17, 2024 08:02 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் சார்பில், கடந்த ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா, தலைவர் டாக்டர் சித்தரஞ்சன் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களை பாராட்டியும், பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
மீஞ்சூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால், மாணவர்கள், 12 கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி., உறுதியளித்தார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான முழு செலவையும் மீஞ்சூர் வியாபாரிகள் சங்கம் ஏற்பதாக உறுதியளித்தனர்.

