/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரியில் அடைக்கப்பட்ட 24 மாடுகள் மீட்பு
/
லாரியில் அடைக்கப்பட்ட 24 மாடுகள் மீட்பு
ADDED : செப் 01, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,:செங்குன்றத்தில் இருந்து கேரளாவுக்கு நேற்று முன்தினம் ஒரு கன்டெய்னர் லாரியில், 24 மாடுகள் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து, விலங்குகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த கார்த்திக், 38, என்பவர், மணவாளநகர் போலீசில் புகார் அளித்தார். போளிவாக்கம் அருகே, லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், 24 மாடுகள், குடிநீர், உணவு, மருத்துவம் மற்றும் காற்றோட்டம் வசதியின்றி, அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, 24 மாடுகளையும் மீட்டு, போந்தவாக்கத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.