sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சின்னம்மாபேட்டையில் மின்வெட்டு நான்கு நாட்களாக பகுதிவாசிகள் அவதி

/

சின்னம்மாபேட்டையில் மின்வெட்டு நான்கு நாட்களாக பகுதிவாசிகள் அவதி

சின்னம்மாபேட்டையில் மின்வெட்டு நான்கு நாட்களாக பகுதிவாசிகள் அவதி

சின்னம்மாபேட்டையில் மின்வெட்டு நான்கு நாட்களாக பகுதிவாசிகள் அவதி


ADDED : மே 30, 2024 09:18 PM

Google News

ADDED : மே 30, 2024 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், பெரியகளக்காட்டூர் ஊராட்சிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தொடர்ந்து நான்கு நாட்களாக பகல், இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு தொடர்வதால், பகுதிவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில், மூன்று -- நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது.

இதனால், மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் துாக்கத்தை தொலைத்து, கடும் சிரமப்படுகின்றனர்.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறுகின்றன. இதனால் மேற்கண்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் சீரான மின்வினியோகத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அவர்கள் புலம்புகின்றனர்.

மாவட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us