sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

4 நாட்களாக குடிநீர் வினியோகம் 'கட்' காலிகுடங்களுடன் சாலை மறியல்

/

4 நாட்களாக குடிநீர் வினியோகம் 'கட்' காலிகுடங்களுடன் சாலை மறியல்

4 நாட்களாக குடிநீர் வினியோகம் 'கட்' காலிகுடங்களுடன் சாலை மறியல்

4 நாட்களாக குடிநீர் வினியோகம் 'கட்' காலிகுடங்களுடன் சாலை மறியல்


ADDED : மே 04, 2024 11:52 PM

Google News

ADDED : மே 04, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது.

கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தெருக் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதற்கு காரணம் மின்மோட்டார் பழுது என கூறப்படுகிறது. மின்மோட்டரை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று நொச்சிலி—கே.ஜி.கண்டிகை மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்கள் வைத்தும் வாகனங்கள் செல்லாதவாறு முட்செடிகள் வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் சிறுகுமி ஊராட்சி மன்ற தலைவர் வந்து மக்களிடம் சமரசம் செய்து, டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்படும் என உறுதி கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us