ADDED : மார் 11, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தனுஷ், 19. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் 'டிவி' இல்லாததால், அருகே உள்ள சலுான் கடையில், 'டிவி' பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு, மதுபோதையில் வந்த சிலர், தனுஷிடம் தகராறு செய்து அவரை தாக்கினர்.இதில், தனுஷ் காயம் அடைந்தார்.
இதுகுறித்த தனுஷ்புகாரின்படி வழக்கு பதிந்த செம்பியம்போலீசார், பெரம்பூரைச் சேர்ந்த ஜெகன், 20,மித்துன், 22, மற்றும்சாமுவேல், 20, ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதில், ஜெகன் மற்றும் சாமுவேல் ஆகியோர்,கல்லுாரி மாணவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.