/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிக்கன் கடையில் ரூ.6.5 லட்சம் அபேஸ்
/
சிக்கன் கடையில் ரூ.6.5 லட்சம் அபேஸ்
ADDED : பிப் 27, 2025 09:50 PM
மணவாள நகர்:திருச்சி பகுதியைச் சேர்ந்தவர் சின்னய்யா, 50; இவர், மணவாள நகர் கபிலர் நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பஜார் பகுதியில் சிக்கன் கடை வைத்து கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், இப்பகுதியைச் சுற்றியுள்ள கடைகளில் வசூலான பணம், 6.5 லட்சம் ரூபாயை நேற்று முன்தினம், கடையில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலையில், பணத்தை வங்கியில் கட்டுவதற்கு கடைக்கு வந்து பார்த்த போது பணம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து சின்னய்யா அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசரித்தனர். விசாரணையில் கடையின் பின்புறம் வழியாக வந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருவதாக மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.

