/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.3.66 கோடி நிலமோசடி : இருவர் கைது
/
ரூ.3.66 கோடி நிலமோசடி : இருவர் கைது
ADDED : செப் 15, 2024 02:00 AM

ஆவடி:அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர், கடந்த 28ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:
நிலம் வாங்குவது தொடர்பாக, சுரேந்தர் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமுல்லைவாயில், பாலாஜி நகரில் உள்ள 7,200 சதுர அடி நிலத்தின் பொது அதிகாரம் சுரேந்தரிடம் இருந்தது தெரிந்தது.
கடந்த நவ., 23ம் அந்த நிலத்தை, 3.66 கோடி ரூபாய்க்கு விலை பேசி, அம்பத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் என் தந்தை பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டேன். அதில், சுரேந்தரின் நண்பர்களான பாபு மற்றும் பராக்சூடா ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டனர்.
மேற்படி இடத்தில் நான் சுற்றுச்சுவர் கட்ட சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த இடம் நாராயணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை தர வாடகைக்கு வாங்கி இருப்பதாக தெரிவித்தார்.
மேற்கூறிய நிலம் தொடர்பான வழக்கில், சுரேந்தர் மற்றும் அவரது நண்பர் பாபு ஆகியோர் போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து என்னிடம் விற்று ஏமாற்றியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்த விசாரணையில், நிலமோசடியில் 2 லட்சம் கமிஷன் பெற்ற அம்பத்துார், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஜஸ்டின், 45, மற்றும் 40 லட்சம் 'கமிஷன்' பெற்ற நொளம்பூரைச் சேர்ந்த தும்மக்குடி வெங்கட கிருஷ்ணராவ், 52, ஆகியோரை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.