sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போலிப்பத்திரம் மூலம் நிலம் விற்பனை

/

போலிப்பத்திரம் மூலம் நிலம் விற்பனை

போலிப்பத்திரம் மூலம் நிலம் விற்பனை

போலிப்பத்திரம் மூலம் நிலம் விற்பனை


ADDED : ஜூலை 05, 2024 08:53 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 65. இவருக்கு கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் வீட்டு மனை உள்ளது. இந்நிலையில், இவரது இடத்திற்கு அருகே சிலர் தடுப்பு வேலி அமைக்கும் போது இவரது இடத்தையும் சேர்த்து தடுப்பு வேலி அமைத்தனர்.

தகவலறிந்த ஜோதி, சென்று விசாரித்த போது அங்கு பணியிலிருந்தவர்கள் இந்த இடம் சென்னையைச் சேர்ந்த டோமினிக் சேவியருக்கு சொந்தமான இடம் என, தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஜோதி சேவியரிடம் கேட்ட போது, இந்த இடத்தை நாங்கள் வாங்கியுள்ளோம். என, தெரிவித்துள்ளார்.

ஜோதி தொடர்ந்து விசாரித்தபோது, அந்த இடத்திற்கான பட்டா மற்றும் ஆவணங்கள் டோமினிக் சேவியர் பெயருக்கு மாறியது தெரிய வந்தது.

தன் நிலத்தை அதிகத்துார் பகுதியைச் சேர்ந்த பாலையம்மாள், பாலன், பக்தவச்சலம், மூர்த்தி, பீட்டர் சக்ரவர்த்தி, நாகராஜன் ஆகிய ஆறு பேர் போலியாக பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக ஜோதி கொடுத்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us