ADDED : ஆக 31, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த நரசிம்மபேட்டை வழியாக மணல் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த லாரியில் உரிய ஆவணம் ஏதும் இன்றி ஐந்து யூனிட் அளவிற்கு மணல் கடத்தி செல்வது தெரியவந்தது.
லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுனர் வங்கனுார் காலனியை சேர்ந்த தினேஷை கைது செய்தனர்.