ADDED : ஜூலை 23, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை, ஜூலை 24-–
வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகன், மீண்டும் வீடு திரும்பவில்லை என, அவரது தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த நடுபாலாபுரத்தை சேர்ந்தவர் கிரிபாபு மகன் நிதீஷ், 18. இவர், கடந்த 19ம் தேதி காலை, அவரது வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.
அவரது பெற்றோரும் வேலைக்கு சென்றிருந்தனர். பின், மாலையில் அவரது பெற்றோர் வீடு திரும்பினர். ஆனால், நிதீஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், நிதீஷ் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து, கிரிபாபு கொடுத்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன நிதீஷை தேடி வருகின்றனர்.
