sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி

/

அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி

அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி

அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி


ADDED : ஆக 01, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அரசு போட்டி தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையில், அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி, ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப்., 14ல் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சிறப்பு பயிற்சி வகுப்புக்கு, முதற்கட்டமாக 100 மாற்று திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள், சி.எஸ்.ஐ., காதுகேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், நாளை சென்னை, சாந்தோம் சாலை, மயிலாப்பூர், சி.எஸ்.ஐ., காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், நாளை காலை 10:00 மணியளவில் நடத்தப்பட உள்ள சிறப்பு பயிற்சியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us