sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூண்டியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் இளைஞர்கள் படம் சீனிவாசன்

/

பூண்டியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் இளைஞர்கள் படம் சீனிவாசன்

பூண்டியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் இளைஞர்கள் படம் சீனிவாசன்

பூண்டியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் இளைஞர்கள் படம் சீனிவாசன்


ADDED : மே 23, 2024 11:42 PM

Google News

ADDED : மே 23, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், சென்னையின் தாகம் தீர்க்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில், தண்ணீர் அளவு குறைந்துள்ள நிலையில், இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் மீன் பிடித்து வருகின்றனர்.

சென்னை நகரின் தாகம் தீர்க்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில், 3.21 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் சேகரிக்கலாம். தற்போது, மழை வரத்து இல்லாததாலும், கிருஷ்ணா நீர் வரத்தும் இல்லாத நிலையில், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது.

தற்போது, 0.51 டி.எம்.சி., அளவிற்கே தண்ணீர் உள்ளது. மேலும், சென்னை நகருக்கு பிரதான கால்வாயில் இருந்து, தினமும் 287 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர், புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பின் சென்னை நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புழல் ஏரிக்கு நீர் திறக்கப்படும் மதகு அருகில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் மீன் பிடித்து வருகின்றனர்.

ஏற்கனவே, பலமுறை இவ்வாறு மீன் பிடித்த இளைஞர்கள் தடுமாறி நீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையினர் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us