sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவி பலாத்காரம் கேரள வாலிபர் கைது

/

மாணவி பலாத்காரம் கேரள வாலிபர் கைது

மாணவி பலாத்காரம் கேரள வாலிபர் கைது

மாணவி பலாத்காரம் கேரள வாலிபர் கைது


ADDED : ஜூலை 27, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : விருகம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, கேரளாவைச் சேர்ந்த 22 வயது பெண் தங்கி, கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார்.

அந்த வீட்டின் அருகே, சினிமா தொடர்பான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நந்துலால், 23, என்பவர் பணிபுகிறார். ஒரே மாநிலத்தவர்கள் என்பதால், இருவரிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி, மாணவி தனியாக இருப்பதை அறிந்து, அதிகாலை 5:30 மணியளவில் வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

இதில், சம்பவம் நடந்த அன்றைய தினம் வாலிபர் தலைமறைவானது தெரிய வந்தது. மேலும், அவர் சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு தனிப்படை போலீசார் முகாமிட்டு நந்துலாலை கைது செய்து, கேரள மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அங்கிருந்து அழைத்து வந்து சென்னை புழல் சிறையில் நேற்று முன் தினம் அடைத்துள்ளனர்.

மிரட்டல்


சாலிகிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கோயம்பேடில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிக்கு 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளம் வாயிலாக பழக்கமானவர், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துவெளியிடப் போவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போய் மாணவி தற்கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

போலீசாரை

தாக்க முயற்சிகேரளாவில் தனிப்படை போலீசார் ஆறு பேர், தன்னை நெருங்கியதை அறிந்த நந்துலால், தன் கூட்டாளிகள், 10 பேரை திரட்டி உள்ளார். அவர்களுக்கு தனிப்படை போலீசாரை அடையாளம் காட்டி, இவர்கள் என்னை கடத்த வந்து இருப்பதாக அவர்களிடம் கூறி தாக்குதல் நடத்தி தப்பிக்க திட்டம் போட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us