sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாணியஞ்சத்திரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

/

வாணியஞ்சத்திரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

வாணியஞ்சத்திரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

வாணியஞ்சத்திரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து


ADDED : மே 25, 2024 11:56 PM

Google News

ADDED : மே 25, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வாணியஞ்சத்திரம் கிராமத்தில் உள்ளது துணை மின் நிலையம். இங்கிருந்து மணலி, திருவேற்காடு, கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றி திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீ வானுயர கொழுந்து விட்டு எரிந்ததில், கரும்புகை அதிகமாக வெளியேறியது. இது சுற்றியுள்ள பகுதிகளில் பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தகவலறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றி, மின்கம்பிகள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us