ADDED : ஆக 04, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார், 26. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்றவர் இரவு தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி வளைவு அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.