sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தெலுங்கானா மாணவர் செஸ்சில் முன்னிலை

/

தெலுங்கானா மாணவர் செஸ்சில் முன்னிலை

தெலுங்கானா மாணவர் செஸ்சில் முன்னிலை

தெலுங்கானா மாணவர் செஸ்சில் முன்னிலை


ADDED : ஆக 26, 2024 11:15 PM

Google News

ADDED : ஆக 26, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் தொடரின் ஐந்தாம் கட்ட போட்டி, போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது.

இப்போட்டியில், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மானிக் மிகுலாஸ் மற்றும் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த ஓராஸ்லி, மங்கோலியாவைச் சேர்ந்த வீராங்கனை யூரிந்துயா உர்ட்சைக் உட்பட 10 பேர் மோதி வருகின்றனர். நேற்று மதியம் ஏழாவது சுற்று நிறைவடைந்தது.

இதில், ரஷ்யாவின் அலெக்சாண்டர் மற்றும் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மானிக் மிகுலாஸ் ஆகியோருக்கான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

அனைத்து போட்டிகள் முடிவில், தெலுங்கானாவின் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பலா மற்றும் ரஷ்யாவின் டேவிட் ஆகியோர் தலா ஐந்து புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து, ரஷ்யாவின் அலெக்சாண்டர் 4.5 புள்ளிகளிலும், ஸ்லோவாக்கியாவின் மானிக் மிகுலாஸ் 4 புள்ளிகளிலும் உள்ளனர்.

தமிழகத்தின் அருண், ஹர்ஷத், மஹாராஷ்டிராவின் ஜெய்வீரர் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளில் உள்ளனர். மங்கோலியாவின் யூரிந்துயா, துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த ஓராஸ்லி, தமிழகத்தின் கே.ஆதர்ஷ் உள்ளிட்டோர், தலா 2 புள்ளிகளில் கடைசி இடத்தில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.






      Dinamalar
      Follow us