/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடைக்கால்வாயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
/
ஓடைக்கால்வாயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஆக 02, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி தாலுகா சூரிய நகரம் இருளர் காலனியை சேர்ந்தவர் கண்ணையன் மகன் ஹேமந்த், 2.
இவன் நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அருகே இருந்த ஓடைக்கால்வாயில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த ஹேமந்தை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.