ADDED : ஆக 06, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த விநாயகபுரம் பகுதி சேர்ந்த வெற்றியழகன் மகன் ரோகித் கிருஷ்ணா, 4. இவர் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு வந்த மாணவன், மதியம், கை கடிகாரத்திற்கு பயன்படுத்தும் சிறிய பேட்டரியை வாயில் போட்டுக் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரியை விழுங்கியுள்ளார்.
ஆசிரியர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.