ADDED : ஆக 02, 2024 11:09 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்பிரான்சிஸ், 52. கொத்தனார் பணி செய்து வரும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 26ம் தேதி திருவள்ளூர் சென்று வருவதாக கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இவரது மனைவி பவானி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
